வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ (basil rajapaksha) தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச ஊழியர் ஆட்சேர்ப்பிற்கும் இடமளிக்கமுடியாது என அவர் கூறியுள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இதனை குறிப்பிட்டார்.