ரூ.52 லட்சத்து 20 ஆயிரத்துக்கு இந்தியாவின் 135 படகுகள் ஏலம்


காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 135 இந்தியப்படகுகள் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 15 ட்ரோலர் படகுகள் காரைநகர் கடற்படைத் தளத்திலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறுதடுத்து வைத்திருந்த 135 படகுகளே நேற்று ஏலத்தில் விடப்பட்டன. கொழும்பிலிருந்து வருகை தந்த மீன் பிடித்திணைக்கள அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. 68 பேர் இதில் கலந்து கொண்டனர். நேற்றுக் காலை 9 மணிக்கு ஆரம்பமான ஏலம் பி.ப. 2 மணிக்கு நிறைவடைந்தது. ‘எல்42’ என அடையாளப் படுத்தப்பட்டிருந்த ஓர் படகு மாத்திரம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு விலை போனது. இதேவேளை காங்கேசன்துறையில் இன்றைய தினம் ஏலம் இடம் பெறவுள்ளது. 

Spread the love