இலங்கை மக்களுக்காக சுவிட்ஸர்லாந்து தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் டொமினிக் பர்க்லர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சு நடத்திய அவர், தனது சந்திப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை முன்னெடுத்தோம். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும், சர்வதேசத்தின் உதவிகள் இலங்கைக்குத் தேவைப்படுவது தொடர்பிலும் பிரதமர் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார் என்று அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.