சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உச்சி மாநாடு நேற்றுஆரம்பம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி குழுமம் (WBG) ஆகியவற்றின் 2022 ஆண்டு கூட்டங்கள் நேற்று ஆரம்பமாகி அக்டோபர் 16 ஆம் திகதி வரை வொஷிங்டன் DC இல் உள்ள IMF மற்றும் உலக வங்கி குழுமத்தின் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த உச்சி மாநாட்டிற்கு எட்டு பிரதிநிதிகளை அனுப்ப இலங்கை தீர்மானித்துள்ளது. இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில் இலங்கையின் தூதுக்குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், நிதிச் செயலாளர் மற்றும் பலர் இராஜாங்க அமைச்சருடன் செல்லவுள்ளனர்.

Spread the love