இன்றைய வானிலை(19/10/2022)

மேல், சபரகமுவ மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய, வட மேல் மற்றும் வட மாகாணத்தில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பலத்த மழை காரணமாக களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் காணப்படுகிறது.

மழை வௌ்ளத்தால் மூழ்கிய பகுதிகளில் நீர் வழிந்தோட ஆரம்பித்துள்ளதாக செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

Spread the love