பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்- நிமல் சிறிபால டி சில்வா

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய மாணவர்கள் மீதான அடக்குமுறை துன்புறுத்தலுக்கு எதிராக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மனக் குழப்பத்தின் காரணமாக அறிக்கைகளை வெளியிட்டமை சாதகமான நிலைமை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பகிடிவதை என்பது ஒருவித மனநோய் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Spread the love