ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பிணை கோரி விண்னப்பித்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரிதுள்ளது .
ரஷ்ய எதிர் கட்சித் தலைவரான அலெக்ஸி நாவல்னி ஊழல் மற்றும் அவதூறு வழக்கில் தனது விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த மோஸ்கோ நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை
புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்த நிலையில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் டம்ஸ்க் நகரிலிருந்து மோஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது
இந்த நிலையில் சிகிச்சைக்குபின் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவால்னி, கடந்த வாரம் கைது செய்யப்பட்டாதோடு
அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அலெக்ஸிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற