இந்தியா, இலங்கை இடையிலான பணப் பரிவா்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை

இந்தியா, இலங்கை இடையிலான பணப் பரிவா்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த இருநாடுகளும் பரிசீலித்து வருகின்றன.

இதுதொடா்பாக இலங்கைத் தலைநகா் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தியா, இலங்கை இடையிலான பணப் பரிவா்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்திய வங்கி, சிலோன் வங்கி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

அப்போது ரிசா்வ் வங்கி, இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் ஏற்பாட்டில், வங்கிக் கணக்குகள் வாயிலாக இந்திய ரூபாயில் வா்த்தகப் பணப் பரிவா்த்தனைகளைத் தொடங்கியிருப்பதன் அனுபவங்களை பிரதிநிதிகள் பகிா்ந்துகொண்டனா். அதன் பலன்களையும் அவா்கள் விவரித்தனா். இந்தக் கூட்டத்தில் ரிசா்வ் வங்கி குழுவும் இணையவழியில் பங்கேற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love