ரயில் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பினால் ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. காலை வேளையில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட இயந்திர பரிசோதகர்களை ஈடுபடுத்தி வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொழும்புக்கு 09 ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Spread the love