71,000 விவசாயிகளுக்கு தலா 50 கிலோகிராம் யூரியா உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது

நாட்டின் 7 மாவட்டங்களில் அரை ஹெக்டேருக்கும் குறைவான காணியில் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய, 71,000 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 கிலோகிராம் யூரியா உரத்தை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களின் விவசாயிகளுக்கு ஒரு மூடை உரம் வழங்கப்படவுள்ளது.  உயர் தரத்திலான விதை நெல் பதப்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்ப முறைமைகள் – அதற்கு அவசியமான உபகரணங்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன. 

Spread the love