ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் துனிசியா வழியாக இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க துனிசியா அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக துனிசியா கடல் வழியாக இத்தாலி செல்ல முயன்ற 3 படகுகளை அந்த நாட்டின் கடலோரா காவல்படையினரால் தடுத்து நிறுத்தி படகுகளில் இருந்த 93 அகதிகளை மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில், துனிசிய தேசிய காவல்படையின் ஊடகப் பேச்சாளர் ஹூஸ்மெடின் ஜபாப்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை இரவு இதுபோன்ற மூன்று முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.