சினோபெக் அடுத்த மாதம் உடன்படிக்கையில் கைச்சாத்து

இலங்கை வந்துள்ள சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்றுக்கும் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

எரிசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும், விற்பனை நடவடிக்கைகளைத் தொடங்குவது தொடர்பிலும் அதற்கான காலக்கெடு, தொடர்புடைய ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் பிற கவலைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, சினோபெக் நிறுவனம் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்றும், இலங்கையில் அதன் விற்பனை செயல்பாடுகள், அன்றிலிருந்து 45 நாட்களுக்குத் தொடங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

Spread the love