“மகாவம்சத்தை” உலக நினைவக மரபுரிமை ஆவணமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவிப்பு

“மகாவம்சத்தை” உலக நினைவக மரபுரிமை ஆவணமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. மகாவம்சம் என்பது லக்தீவ மகா விகாரையின் வரலாறு மற்றும் ரஜரட்ட இராச்சியத்தின் வரலாறு பற்றி மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் கவியமாகும்.

இது கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1815 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் வெளியிடப்பட்ட உலக நினைவக சர்வதேச ஆவணத்தில், 64 புதிய ஆவண மரபுரிமையில் “மகாவம்சமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love