கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்

சுகாதார அமைச்சுக்கு முன்னதாக சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதனால் கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதொடு, பதற்றமான சூழிநிலையும் ஏற்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்கள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதால் அந்த பகுதியில் இன்றும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Spread the love